Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 2 ஆம்னி பேருந்துகள் தீ பிடித்து எரிவதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை. வீக் என்ட் என்பதால், வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு பெரும் கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.